tamilnadu

img

நிலுவைத் தொகையினை முழுமையாக வழங்குக

சேலத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 16- அரசாணை 62 மற்றும் 7வது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகையை டேங்க் ஆபரேட்டர், துப்புரவு தொழிலாளர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சிகளில் பணியாற் றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும்டேங்க் ஆபரேட்டர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதிய அர சாணை 2(டி) படி சம்பளம் வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தொழிலாளர்க ளுக்கு ஊதியம் ஒரு சில ஒன்றி யங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒன்றியத்திற்கு ஒன்றியம் மாறுபட்ட ஊதியம்  வழங்கப்பட்டு வருகிறது. அதை  சரிசெய்து சட்டபூர்வமான சம்ப ளத்தை அனைத்து ஊராட்சிக ளிலும் அமல்படுத்த வேண்டும்.

2000 ஆம் ஆண்டிற்க்குப் பின் னர் பணியில் சேர்ந்த ஒஎச்டி ஆப்ரேட்டர்களுக்கு தொகுப்பூதி யம் வழங்க வேண்டும். பணியின் போது இறந்து போன தொழிலா ளர்களின் குடும்பத்திற்கு வழங்கப் பட வேண்டிய இழப்பீடு மற்றும் வாரிசு வேலை வழங்கப்படாமல் உள்ளது. அதனை உடனடியாக அவர்களின் குடும்ப வாரிசுக ளுக்கு வேலை வழங்க வேண்டும். ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அறிவித்து வழங்கிடவேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் காலிப்பணியி டங்களை நிரப்பிட வேண்டும். சேலம் மாநகராட்சி மற்றும் நக ராட்சிகளில் பணி செய்யும் துப்பு ரவு பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ பணத்திற்கு உரிய ரசீது வழங்க வேண்டும். மேட்டூர் நக ராட்சியில் குப்பை வண்டிகளில் பெண்களை ஏற்றி வேலை வாங்கு வதை நிறுத்த வேண்டும். மேட் டூர் நகராட்சியில் துப்புரவு பணி யாளர்களை இறக்கி வேலை வாங்குவதற்கு மாறாக உபகர ணங்களை பயன்படுத்த வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ. கோவிந்தன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.உதயகுமார், மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.கே. தியா கராஜன், சி.கருப்பண்ணன் உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆவேச முழக்கங் களை எழுப்பினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் கோரிக்கை மனுக்களை அளித் தனர்.