tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக

சேலத்தில் இஸ்லாமியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்

சேலம், மார்ச் 18-  குடியுரிமை சட்டத்திற்கு எதி ராக தமிழக சட்டமன்றத்தில் தீர் மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்  புதனன்று நடைபெற்றது.  சேலத்தில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அம்ஜத் தலைமை வகித் தார். இப்போராட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் தேசிய கொடியை ஏந்தி ஆண்கள், பெண் கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட் டோர்  குடும்பத்துடன் பங்கேற் றனர்.  போராட்டத்தில் சிஏஏ,  என்பிஆர், என்ஆர்சி போன்ற வற்றை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்ற வேண்டுமென முழக்கங்கள் எழுப் பினர்.   முன்னதாக,கோட்டை மைதானம் நோக்கி பேரணியாக சென்றனர்.  

;