கோவை, நவ. 9- கொரோனா அச்சுறுத்தல் முழு மையாக நீங்காத நிலையில், மாண வர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பதை ஒத்தி வைக்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பங் கேற்ற பெரும்பாலான பெற்றோர் கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்க ளிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது என தமிழக அரசு அறி வித்திருந்தது. இதன் ஒருபகுதியாக கோவையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 500க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட் டம் திங்களன்று நடைபெற்றது. இதில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற் றோர் பள்ளிக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர்.இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்துகொள் ளும் பெற்றோர்களிடம், பள்ளிகள் திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் அதற்கு அவர் கள் சொல்லும் காரணங்கள் குறித்தும் எழுத்து பூர்வமாக கருத்தை பதிவு செய்ய அறிவுறுத்தி னர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் பள்ளி திறப்பை சில மாதம் ஒத்தி வைப்பு சரியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். தற்போது இருக்கும் பருவநிலை மாற்றம், ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப் பட்டதால் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவியது போன்றவற்றை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
மாணவர்க ளின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் போதிய தடுப்பு ஏற்பா டுகள் செய்யப்பட்டாலும், பள்ளிக ளுக்கு வரும் பெரும்பாலான மாண வர்கள் பேருந்து, ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து வாகனங் களை நம்பியே பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்ற இடங்களில் இருந்து ஏதாவது ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டா லும், வகுப்பில் பயிலும் மொத்த மாணவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். பள்ளிகளில் தனிம னித இடைவெளியை கடைபிடிப்ப தும், வகுப்பு நேரம் முழுவதும் முகக் கவசம் அணிவதும் கடினமானது. பள்ளிகளில் உள்ள கழிவறை சுத்த மாக இல்லாவிட்டாலும் தொற்று பரவும் என்பதால் குறைந்தது 3 மாத மாவது பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர் கள் வலியுறுத்தினர். இதில், வரப்பெற்ற கருத்துகள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.