tamilnadu

img

பேருந்து கவிழ்ந்து விபத்து- 20க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு, மார்ச் 18- அந்தியூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 20க்கும் மேற்பட்டவர்கள் பலத்த படுகாயமடைந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து  பட்லூர் நான்கு வழி சாலை சந்திப்பு, ஓல கடம், மைலம்பாடி, பவானி ஆகிய வழி யாக புதனன்று ஈரோட்டிற்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந் நிலையில் பேருந்து பட்லூர் நான்கு வழி  சாலை சந்திப்பு வழியாக குட்டைமேடு  பகுதியில் செல்கையில் நிலைதடுமாறி  மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள் ளானது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம்  செய்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம டைந்தனர். ஓட்டுநர் தலைமறைவாகினார். இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஓட்டுநரை தேடி வருகின்றனர்.  தொடர்ந்து அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு  வருவதால் வேக தடுப்புகளை அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;