சேலம், செப்.20- இந்தி திணிப்புக்கு எதிராக சேலத்தில் வாலிபர் சங்கம் சார்பில் பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்பும் இயக்கம் நடை பெற்றது. மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் இந்தியை திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வரு கிறது. இம்முயற்சிக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கடும் எதிர்பபு எழுந்துள்ள நிலை யில், பல்வேறு அமைப்பினரும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தி திணிப் பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கையை மட்டுமே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாநகர வடக்கு கமிட்டி பெரம் பலூர் கிளை சார்பில் வெள்ளி யன்று பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்பும் இயக்கம் நடை பெற்றது. இந்த இயக்கத்தில் மாவட்ட பொருளாளர் வி. வெங்கடேஷ், மாநகர துணைச் செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகரக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த இயக்கத்தில் 250க்கும் மேற் பட்ட மின்னஞ்சல்கள் அனுப்பப் பட்டது.