tamilnadu

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு- கையெழுத்து இயக்கம்

கோவை, பிப். 3 –  குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை,ஈரோடு மாவட்டங் களில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வரு கிறது. தமிகத்திலும் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இதன்தொடர்ச் சியாக சிஏஏ, என்ஆர்சி, என்பி ஆர் சட்டத்திற்கு எதிராக தமிழ கம் முழுவதும் கையெழுத்து இயக் கத்தை நடத்துவது என மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி  கட்சிகள் முடிவெடுத்து அறிவித் துள்ளது. மாநிலம் முழுவதும்  ஒரு கோடி கையெழுத்துக்களை பெற்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர்களுக்கு அனுப்பு வது என முடிவெடுக்கப்பட்டுள் ளது. இதனையடுத்து ஞாயிறன்று மாநிலம் முழுவதும் திமுக, காங்கிரஸ், சிபிஎம், மதிமுக,  சிபிஐ, விசிக, கொமதேக உள் ளிட்ட கூட்டணிக் கட்சியினர் அனைத்து பகுதிகளிலும் கையெ ழுத்து இயக்கத்தில் ஈடுபட்டுள்ள னர்.  இதன்ஒருபகுதியாக, கோவை  மாவட்டம் முழுவதும் கையெ ழுத்து இயக்கம் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி கட்சிகளின் முன்னணி ஊழியர்கள் பெரும் திரளாக பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, இச்ச ட்டத்தின் ஆபத்து குறித்து மக்களி டையே பிரச்சாரம் செய்து கையெ ழுத்துக்களை பெற்று வருகின்ற னர். பொதுமக்களும் இச்சட்டத் திற்கு எதிராக தங்களின் எதிர்ப்பு களை தெரிவித்து கையெழுத் திட்டு தங்களது ஆதரவை தெரிவித் தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் கரு ணாநிதி சிலை வளாகத்தின் முன்பு ஞாயிறன்று கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. இதனை கொங் குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் பி.ஆர்.ஈஸ்வ ரன் துவக்கி வைத்தார். தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்து சாமி தலைமை தாங்கினார். மாநில  துணைப் பொதுச் செயலாளர் சுப்பு லட்சுமி ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கே.துரைராஜ், ஆர்.கோமதி மற்றும் நகரச் செயலாளர் பி.சுந்தர் ராஜன், மாவட்டக்குழு உறுப்பி னர் ஏ.சகாதேவன், தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி மாநகர் மாவட்ட தலைவர் வி.பி.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளர் விநாயகமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் திருநாவுக்க ரசு ஆகியோர் கலந்து கொண்ட னர்.

;