கோவை, அக். 8 - என்டிசி பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்தி கோவையில் அனைத்து என்டிசி ஆலை வாயிலு கள் முன்பு தொழிலாளர்கள் வியா ழனன்று போராட்டத்தில் ஈடுபட் டனர். மத்திய அரசுக்கு சொந்தமான என்டிசி பஞ்சாலைகள் தமிழகத்தில் கோவை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன. தேசிய பஞ்சாலைக் கழகத்துக்கு சொந்தமான இந்த 7 ஆலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர்.இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரண மாக பொது முடக்கம் அறிவிக்கப் பட்ட நிலையில், இந்த ஆலைகள் மூடப்பட்டது. ஆலை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு முழுச் சம்பளமும், தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அது வும் தொடர் போராட்டத்தின் விளை வாக கிடைக்கப்பட்டது. தற்போது அதுவும் காலதாமதமாக வழங்கப் படுகிறது. இந்நிலையில், ஆலைகளை முழு மையாக இயக்கிட வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
அதுவரை முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்ஒருபகுதியாக தொடர் உண் ணாவிரத போராட்டம் நடத்த அனைத்து பஞ்சாலை தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவெடுத்திருந்தது. இதற்கு அனுமதி கிடைக்காத நிலை யில் வியாழனன்று அனைத்து என்டிசி பஞ்சாலைகளின் முன்பு தொழிலாளர்கள் அமர்ந்து வேலை கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை பங்கஜமில் ஆலை முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு சிஐடியு மில் தொழிலாளர் சங் கத்தின் நிர்வாகி ராஜேந்திரன் உள் ளிட்டோர் தலைமை தாங்கினர். இதேபோன்று கோவையில் உள்ள முருகன் மில், சிஎஸ்டபுள்யு மில், கம் போடியா உள்ளிட்ட ஐந்து பஞ் சாலைகளிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எச்எம்எஸ், எல்பிஎஃப், சிஐ டியு, ஐஎன்டியுசி, எம்எல்எஃப், ஏஐ டியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் தலைவர்கள், தொழி லாளர்கள் திராளாக பங்கேற்றனர்.