கோவை, அக்.31- கோவையில் ஆன்லைன் ரம்மி சூதாட் டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, சீரநாயக்கன் பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனி யார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கொரோனா பொதுமுடக்க காலத் தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ் கிய இவர் மற்ற இணைய சூதாட்டங்களிலும் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்நிலையில், ஏராளமான பணத்தை இழந்துள்ளார். இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என தொடர்ந்து விளையாடி வந்த அவருக்கு தோல்வியே கிடைத்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த மதன் குமார், வெள்ளியன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டுள்ளார்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஆன்லைன் பப்ஜி கேமிற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆன்லைன் சூதாட் டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த மதன் குமார் தற்கொலை செய்துள்ளார். ஆன் லைன் விளையாட்டுகளில் மூழ்கி அதனை விட்டு வெளியேற முடியாமல் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் வது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.