tamilnadu

img

சமூக நல்லிணக்க மேடையின் சார்பில் இலங்கையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

தருமபுரி, ஏப். 30-இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு, தருமபுரி தொலைத் தொடர்பு நிலையம்அருகே, சமூக நல்லிணக்க மேடை சார்பில் செவ்வாயன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தனது அஞ்சலியை தெரிவித்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளர் இரா.சிசுபாலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார்,செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, கே.என்.மல்லையன், டி.எஸ்.ராமச்சந்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைஸா மேரி,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலர் பொ.மு.நந்தன், மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் தலைவர் செந்தில்ராஜா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

;