tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்

சேலம், மே 22-தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நச்சு கழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கேட்டும், ஆலையை மூடக்கோரியும் போராடிய மக்கள் மீது தமிழக காவல்துறையினர் கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதியன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானதுடன், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம்புதனன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு சார்பில் சிறை தியாகிகள் நினைவகம் முன்பு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, டி.உதயகுமார்,எம்.சேதுமாதவன், வி.கே.வெங்கடாச்சலம், எம்.குணசேகரன், எ.ராமமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.