அவிநாசி, செப்.3- அவிநாசியில் போதிய அடிப்படை வசதிகளின்றி இயங்கி வரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைத்திட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளன. அவிநாசி ஒன்றியம், பழங்கரையில் பொதுப்பணித் துறை கட்டிடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பெருமாநல்லூர், அன்னூர், திருப்பூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த புதிய வாகனங்கள் பதிவு செய்வது போன்ற பணிகள் நடைபெறுகிறது. அதேநேரம், பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த அலு வலகம் செயல்பட்டு வருகின்ற நிலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் ஊழியர்கள், பொதுமக் கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரும் இன்ன லுக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வாகன ஓட்டுனர் உரிமை பெற 8 போடுவ தற்கு போதிய இட வசதியின்றி நீரோடையைப் பயன் படுத்தி வரும் நிலை உள்ளது. இதேபோல், தகுதிச் சான்று பெற வரும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. மேலும் கழிப்பிடம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அடிப்படை வசதி களுடன் கூடிய சொந்தக் கட்டிடம் ஏற்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.