tamilnadu

img

அமராவதி ஆற்று சுழலில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி

தாராபுரம், ஆக. 25 - தாராபுரம் அமராவதி ஆற்றில் சுழலில் சிக்கி ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். தாராபுரம் புற வழிச்சாலையில் உள்ள தனியார் கண்ணாடி கடையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபு ராம் என்பவரது மகன் தீபாராம் (22)  வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் மதன் ராம், ரமேஷ், மோகன்லால், பரத், மகேந்திரன் ஆகி யோரும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபா ராம் உள்பட 6 பேரும் தாராபுரம் புறவழிச்சாலை யில் நான்குவழிச்சாலை அமைய உள்ள அமராவதி பாலத்திற்கு அடியே குளிப்பதற்காக மதியம் 1 மணியளவில் சென்றனர்.  ஆற்றில் 6 பேரும் உற்சாகமாக நீந்தி விளை யாடிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீபாராம் ஆழமான பகுதிக்குச் சென்ற போது சுழலில் சிக்கி உயிருக்குப் போராடினார். ஆனால் நண்பர்கள் காப்பாற்றும் முன்பே நீரில் மூழ்கி உயிரிழந்தார் . இதுகுறித்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா ஜெயசிம்மராவ் தலைமையிலான வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீபாராம் உடலை மீட்டனர். தீபாராமின் உடலை பார்த்து நண்பர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சுழலில் கடந்த ஆண்டு செல்பி எடுக்க முயன்ற தாராபுரம் கோர்ட்டு ஊழியரின் மகள் உள்பட நான்கு பேர் ஒரே நேரத்தில் ஆற்றில் முழ்கி உயிரி ழந்தனர். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுப்பணித்துறை சார்பில் வைக்கப்பட்ட அபாய கரமான இடம், சுழல் உள்ளது என்ற அறிவிப்பு பலகை யும் நான்கு வழிச்சாலை பணிக்காக அப்புறப்படுத்தப் பட்டுவிட்டது. எனவே அகற்றப்பட்ட அபாய அறிவிப்பு பலகையை மீண்டும் வைத்து மேலும் இதுபோன்ற உயிரிழப்புகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்  சமூக ஆர்வலர்கள்.