கோவை, அக். 9- தடையில்லா மின்சார சேவை பொது மக்களுக்கு கிடைத்திட காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி ஒத்துழையாமை இயக்கம் நடத்த மின்வா ரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து கோவையில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகியும், அனைத்து மின்வாரிய தொழிற்சங்க கூட் டுக்குழுவின் தலைவர்களில் ஒருவருமான மதுசூதணன் செய்தியாளர்களிடம் கூறுகை யில், களப்பணிகள் செய்வதற்கு பணியாளர் கள் இல்லாத காரணத்தால் துறை சாராத நபர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்கள் வேலை செய்வதால் மட்டுமே தற் போது தடையில்லாத மின்சாரம் வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், இத்தகைய நபர் கள் பணியாற்றுகையில் ஏற்படும் விபத்து களுக்கு வாரிய பணியாளர்கள் மீது நடவ டிக்கை மேற்கொள்கின்றனர்.
மேலும், விபத்திற்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற செலவினங்களுக்கு வாரிய பணியாளர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்கின்றனர். இருப்பி னும், காவல்துறை நடவடிக்கை என்ற பெயரில் 304 ஏ பிரிவின் கீழ் (மரணத்தை விளைவிக்கும் குற்றம்) வழக்குப்பதிவு செய் யப்படுகிறது.
இத்தனை நிகழ்வுகள் நடந்தாலும் நிர் வாகத் தரப்பில் தங்களுக்கு எவ்வித பொறுப் பும் இல்லை என்ற எண்ணத்துடன் கண் டும், காணாமல் இருக்கின்றனர். மேலும், பணியாளர்கள் மீது துறை ரீதியான நட வடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனால், கோவை மண்டலத்தில் களப் பணிகளில் அதிகப்படியான காலிப்பணியிடங்கள் இருப்பதை தமிழக அரசும், வாரிய தலை மையும் கண்டு கொள்வதில்லை. இதனை நிரப்புவதற்கான எந்த முயற்சியும் மேற் கொள்ளப்படுவதில்லை.
இதனால் பொது மக்களுக்கும், களப் பணியாளர்களுக்கும் தினசரி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. பதவி உயர்வும் இல்லை, பணிச்சுமையும் கூடுகிறது என்கிற நிலையில் கள பணியா ளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர்.
ஆகவே, கோவை மண்டலத்தில் உள்ள மேற்கண்ட குறைகள் குறித்து வெளிப்படை யாக எல்லோரும் அறிந்துகொள்ளும் வகை யில் வாரிய தலைமைக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், இது மட்டுமே இப்பிரச் சினைகளுக்கு தீர்வு எனவும் கூறப்பட்டது.
கடந்த 2018 பிப்ரவரி 28 ஆம்தேதி முத்த ரப்பு ஒப்பந்த சரத்துப்படி ரூபாய் 380 வீதம் தினகூலியை வாரியமே நேரடியாக அளித்து துறை சாராத பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தெரி வித்தோம்.
இது குறித்தும் வாரிய தலை மைக்கு கடிதம் மூலம் எழுதி ஒப்புதல் பெற வும் வலியுறுத்தினோம். அதிகாரிகளு டனான பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மின் வாரிய கூட்டுக்குழு எடுத்துள்ள தீர்மானங் களின் அடிப்படையில் ஒப்பந்தப்படி பணி செய்வது, ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது என தெரிவித்தார்.