tamilnadu

img

ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் அவிநாசி பகுதியில் சுவரொட்டி

அவிநாசி, டிச. 27- அவிநாசி அருகே ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என அப்பகுதி மக்களால்  சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன‌. அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வாக்கா ளர்கள் உள்ளனர். இங்கு  டிச.30ஆம் தேதி உள் ளாட்சித் தேர்தல் நடை பெற உள்ளது. இந்த நிலையில் கையூட்டு, மது  பெற மாட்டோம், மனசாட்சி யின்படி வாக்களிப்போம், ஓட்டுக்கு பணம் வாங்குவது அவமானம், ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம், ஓட்டுக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பொது மக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு  பணம் கொடுப்பவர்களுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

;