ராயபுரம்: 1,000ஐ நெருங்கும் பாதிப்பு
சென்னை ராயபுரம் மண்டலத்தில் 971 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 895 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 699 பேரும் கொரோனாக்கு உள்ளகி உள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரதது 637 பேரில் 1071 பேர் குணமடைந்துள்ளர். 44 பேர் இறந்துள்ளனர். 4 ஆயிரத்து 501 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை: 90 பேருக்கு கொரோனா
சென்னையில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி, தலைமை செயலக உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா வீட்டில் பணி செய்து வந்த காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடலூர்: 146 பேர் குணமடைந்தனர்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்தும், தனிமை முகாம்களில் இருந்த 169 பேரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்
சென்னை: 3 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்று காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் உயரிழந்துள்ளனர்.
34 பேருக்கு தலா ரூ.2 லட்சம் உதவி
கொரோனா தடுப்பு பணியில் தொற்றுக்கு ஆளானா சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 34 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
முதல்வர் நிவாரண நிதி ரூ.367 கோடி
கொரோனா நிவாரணப்பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 367 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு: 21 பேருக்கு தொற்று
செங்கல்பட்டு மாவட்டத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. மொத்தத்தில் 67 பேர் குணமடைந்துள்ளளனர். 4 பேர் இறந்துள்ளனர். தற்சமயம் 379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சையிலிருந்து தப்பியோட்டம்
சென்னை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியை சேர்ந்தவர் 43 வயது நபர் கொரோனா தொற்று காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையிலிருந்து வெள்ளியன்று (மே 15) தப்பியோடி அவரை காவல்துறையினர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மயங்கி இறந்தவருக்கு கொரோனா
சென்னை ராயப்பேட்டையில் கடந்த 12 ஆம் தேதி 35 வயது நபர் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இறந்த நபரை ஆட்டோ மூலம் அழைத்து வந்தவர்களை நபர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணியில் சுகாதார துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
4.73 லட்சம் பேர் கைது
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 4 லட்சத்து 46 ஆயிரத்து 633 வழக்குகள் பதியப்பட்டு 4 லட்சத்து 73 ஆயிரத்து 606 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 3 லட்சத்து 90 ஆயிரத்து 562 வாகனங்கள் பறிமுதல் செய்ப்பட்டுள்ளன. அபராதத் தொகையாக 5 கோடியே 59 லட்சதது 90ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: 11 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், மலையம்பாக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்டு 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.
வேலுர்: 6 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றுடன் வேலுர் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்தனர்.