கோவை, ஆக.21 - கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி.,மண்ணியல் என்ற புதிய பாடப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கிறது. கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலையில் பி.ஏ.,தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.எஸ்.சி.,இயற்பியல், கணிதம், வேதியியல், விலங்கியல் உள்பட மொத் தம் 23 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்நிலை யில், தற்போது புதியதாக பி.எஸ்.சி., மண் ணியல் (ஜியாலஜி) என்ற புதிய பாடப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இது பூமியின் தோற்றம், சுற்றுப்புறம், கடலுக்கு அடியில் உள்ள வளங்கள், எரி வாயு வளங்களை கண் டறிதல், இயற்கை பேரழிவினால் சுற்று சூழ லுக்கு ஏற்படும் பாதிப்பு, மண்ணின் தன் மையை கண்டறிவது போன்றவற்றை பற்றி படிக்கும் பிரிவு ஆகும். இதற்கு பிளஸ்2 வில் இயற்பியல், வேதி யியல், கணித பாடப்பிரிவுகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிப் கலாம். விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் வழங்கப்ப டுகிறது. விண்ணப்ப கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.50 மற்றும் எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் சாதி சான்றிதழ் காண்பித்து இல வசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், அன்றைய தினமே மாணவர் சேர்க்கையும் நடக்கிறது. மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என கல் லூரி முதல்வர் சித்ரா தெரிவித்துள்ளார்.