மேட்டுபாளையம், பிப்.24 - வனப் பகுதியினுள் இருக்கும் இயற்கை நீராதாரங்கள் வெப்பத்தின் தாக்கத்தால் வற்றி வருவதால் வன உயி ரனங்களின் தாகம் தீர்க்க வனச்சரக எல்லையோரங்களில் கட்டப்பட் டுள்ள தொட்டிகளை தேடி கூட்டம் கூட்டமாய் வரத்துவங்கியுள்ளன. கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட, மேட்டுப்பாளையம், சிறு முகை, காரமடை உள்ளிட்ட வனச்ச ரக பகுதிகளில் புலி, யானை, கரடி, சிறுத்தை, காட்டுமாடுகள், மான்கள் என பல்வேறு வன உயிரினங்கள் வாழ்கின்றன. கடந்த மழைக்காலத்தில் பெய்த பருவ மழையினால் காடுகளில் இருந்த வனக்குட்டைகள், நீரோடைகள், தடுப்பனைகளில் நீர் நிரம்பியே காட்சி யளித்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதால் வனத்தில் உள்ள நீராதாரங்கள் வற்ற துவங்கி விட்டன. இதனால் இங்குள்ள ஏராளமான யானைகள் மற்றும் பிற உயிரினங்க ளுக்கு தண்ணீர் போதுமான அளவு இல்லாமல் குறைந்துவிட்டது. இந்நி லையில் யானைகள் உயிர்வாழ தேவையான தண்ணீர் கிடைக்காவிட் டால் வனத்தை ஒட்டியுள்ள ஊர்களுக் குள் தண்ணீர் தேடி புகுந்து விடும் அபாயமும், மனித யானை மோதலும் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் வனத்துறை சார்பில் வன எல்லைகளில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது வனத் தினுள் வறட்சி துவங்கியுள்ளதால் யானைகள் காட்டை விட்டு வெளியே றுவதை தடுக்க இத்தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேட்டுப்பாளையம் வனத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வரத்துவங்கியுள்ளன. இதனால் வன உயிரினங்கள் தண்ணீர் தேடி ஊருக் குள் நுழைவது பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.