tamilnadu

img

தேசிய ஓய்வூதியர் தின கருத்தரங்கம்

முத்தரப்பு ஒப்பந்தம் மூலம் ஓய்வூதியர் நலன் காக்க கோரி தீர்மானம்

ஈரோடு,டிச 17- ஈரோட்டில், மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் அமைப்பு களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில், தேசிய ஓய்வூதி யர் தின கருத்தரங்கு செவ்வா யன்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் மணி பாரதி தலைமை வகித்தார். ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர்சங்க தேசியபொதுச் செயலாளர்   கே.ராக வேந்திரன், அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க இணைசெயலாளர்  எம்.கிரிஜா உட்பட பலர்பேசினர்.  முன்னதாக கருத்தரங்கில் புதிய ஓய்வூதிய திட்டத்தை  ரத்து  செய்தல். கம்யூடேஷன் பிடிக் கும் காலத்தை பத்தாண்டாக குறைக்க வேண் டும். தபால் காரர்களுக்கு 1996 ஜன. 1முதல் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதப்படி நிலுவை தொகை வழங்க வேண்டும். தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வழங்க வேண்டும். இவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் மூலம், ஊழி யர்கள், ஓய்வூதியர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். ஓய்வூதியர்கள், மூத்த குடிமக்களுக்கு தமிழக அரசின் இல வச பஸ்பாஸ் அனுமதி வழங்க வேண் டும். பி.எஸ்.என்.எல்,  நிறுவனத்துக்கு ‘4ஜி’ அலைக்கற்றைக்கான அனுமதியை நாடு முழு வதும் வழங்க வேண்டும், என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில் ஏராளமானோர் பங்கேற்ற னர்.