கோவை, ஜூன் 23- தேசிய அளவிலான கார் பந்தயம் கோவை கரிமோட்டார் ஸ்பீடுவேயில் சனியன்று நடை பெற்றது. சூப்பர் ஸ்டாக் பிரிவின் 2-வது சுற்றில் கர்நாடக வீரர்கள் முன்னிலை பெற்றனர். கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவேயில் எம்.ஆர்.எஃப், எம்.எம்.எஸ்.சி. தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டிகளுக்கான 2-வது சுற்று நடைபெற்றது. இதில், பல்வேறு மாநி லங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வோக்ஸ்வேகன் மோட்டார் ஸ்போர்ட் பிரிவில் துருவ் ஷிவாஜி மோகித் முதலி டத்தையும், கார்த்திக் தரணி 2-வது இடத்தையும், அர்ஜுன் பாலு 3-வது இடத்தையும் பிடித்தனர். இதேபோல், வோக்ஸ்வேகன் ஏமியோ கிளாஸ் பிரிவில், ஐதராபாத்தின் ஜீட் ஜாபாக் முதலிடத்தை யும், டெல்லியைச் சேர்ந்த அன்மோல் சிங் சாஹில் 2-வது இடத்தையும், மும்பையைச் சேர்ந்த சவுரவ் 3-வது இடத்தையும் பிடித்தனர். ஜுனியர் பிரிவில் வங்கதேசத்தின் ஐமான் சதாத், நாஷிக்கைச் சேர்ந்த விரஜ் ஜெய்ராஜ் மற்றும் பெங்களூரூவின் சேட்டன் சுரினேனி ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்த னர். சூப்பர் ஸ்டாக் சுற்றில் ரித்விக் தாமஸ், பிரதீக் பென்யா, ஆர்.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை