தருமபுரி, ஜூலை 31- தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால் இந்தியா கல்வியில் இருண்ட காலமாகிவிடும் என தரும புரி புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் ஆதவன்தீட்சண்யா பேசினார். தருமபுரி மதுராபாய் சுந்தரராஜ ராவ் திருமண மண்டபத்தில் நடை பெற்று வரும் புத்தக திருவிழாவில் அறிவுசார் கருத்தரங்கம் திங்களன்று மருதம் நெல்லி கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.கோவிந்த் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் மா.பூங்குன் றன் வரவேற்றார். இதில் ‘பிறப்போக் கும் உயிர்க்கெல்லாம்’ என்ற தலைப் பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட் சண்யா பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், 2019 வரைவு தேசிய கல்விக்கொள்கை குறித்து கருத்துக் களை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு தெரிவித்திருக்கிறது. 482 பக்கம் கொண்ட இந்த கல்விக்கொள் கையை இணையத்தில் ஆங்கிலம், இந்தி மொழியில் வெளியிடப்பட் டுள்ளது. ஆனால், இனக்குழு, பண் பாட்டில் அடையாளம் கொண்ட இந் திய நாட்டில் இந்த இரண்டு மொழிக ளும் அன்னிய மொழியாகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி 22 மொழிகளில் கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்க வேண்டும். மேலும், இந்த புதிய கல்விக் கொள்கையானது 3 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதவேண்டும் என்று சொல்கிறது. கல்வியில் உலகதரம் பெற்ற பின்லாந்து நாட்டில் கூட 7 வயதில் பள்ளிக்கு வந்தால் போதும் என சொல்கிறது. ஆனால், இந்த புதிய கல்வி கொள்கையானது பள்ளி கல்வியிலேயே 4 பொதுத்தேர்வு எழுத வேண்டும். ஒரு பொதுத்தேர்வு வந்தா லேயே குடும்பம் எவ்வளவு பதட்டப் படுகிறது. இத்தகைய சூழலில் 4 பொதுத்தேர்வை மாணவர்கள் எழு தினால் குடும்பம் என்னவாகும் என கேள்வி எழுப்பினார். மேலும், இதன்பின்னர் நேசனல் டெஸ்டிஸ் ஏஜென்சி வைக்கிற தேர் வில் வெற்றிபெற்றால் பட்டப்படிப்பு படிக்கலாம் என புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. இதேபோல், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய குலத்தொழிலை செய்யலாம் என சொல்கிறது. இத்தகைய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத் தினால் இந்தியா கல்வியில் இருண்ட காலமாகிவிடும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், சீனிவாச பாலி டெக்னிக் நிர்வாகி தங்கராசு,கவிஞர் நாகைபாலு, ஸ்டான்லி முருகேசன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் ஏ.மாதேஸ்வ ரன், கலைமகள் கல்வி நிறுவனங்கள் நிர்வாகி நடராஜன், அ.அசோக்குமார், நூலகர் சி.சரவணன் ஆகியோர் பேசினர்.