tamilnadu

img

கோவையில் இளம்பெண் மர்ம மரணம்

கோவை, ஜூலை 17-  கோவையில் இளம்பெண் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர் பாக கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் வலுக் கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. கோவை இடையர்பாளையம் பகு தியை சேர்ந்த பத்மநாபன், பேபி தம்பதி யினரின் 25 வயதுடைய மகள் ஷோபனா. பி.சி.ஏ.பட்டதாரியான இவர் கடந்த 2 மாதங்களாக பாப்பம்பட்டி பிரிவில் உள்ள லலிதா பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்துள்ளார். செவ்வாயன்று வழக்கம்போல் பியூட்டி பார்லருக்கு வேலைக்கு சென்ற நிலையில், மாலையில் அவரது வீட்டிற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர், ஷோபனாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை உடனே வந்து அழைத்து செல் லுமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து பியூட்டி பார்லருக்கு ஷோபனாவின் பெற்றோர் சென்று பார்த்தபோது, அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலை யில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந் தனர். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த  காவல்துறையினர் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் புதனன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தங்களது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள் ளதால் கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் ஷோபனாவின் பெற்றோர்கள் வலியுறுத்தினர். ஆனால் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த  பிறகே எதுவும் செய்ய  முடியும் என காவல்துறையினர் தெரி வித்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த ஷோபனாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  அப்போது, அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதற் கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஷோபனாவின் தாயாரை காவல்துறை யினர் வலுக்கட்டாயமாக அப்புறப்ப டுத்த முயலுகையில் அவருக்கு காயம் ஏற்பட்டு மூக்கிலும், வாயிலும் ரத்தம்  கசிந்தது. இதனால் மேலும் ஆவேசம் அடைந்த உறவினர்கள் காவல்துறையின ரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரி வித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் ஏற்படவே கூடுதலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.