கோவை, செப்.11- ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்து மக்க ளுக்கு சேவையாற்றி வரும் மூதாட்டி கமலாத்தாவை நேரில் அழைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பாராட்டி னார். மேலும், பாட்டிக்கு பாரதப் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என்று தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வடிவே லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள் (85). தனது முதுமைப் பருவத்திலும் அப்பகுதியில் கடந்த 30 வருடங்களாக குறைந்த விலைக்கு இட்லி கொடுத்து வருகிறார். இதனை சமூக வலைத்தளத்தில் இளைஞர்கள் பகிர இன்று உலகம் முழுவதும் இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு ரூபாய் இட்லி மூதாட்டி கமலாத்தாளை நேரில் அழைத்து பாராட் டிய கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி அவரது சேவைக்கு வாழ்த்து தெரி வித்ததோடு, பாரதப் பிரதமரின் வீடு கட் டும் திட்டத்தின் கீழ் கமலாத்தா பாட்டிக்கு வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்தார். மேலும், பாட்டிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.