tamilnadu

img

சிறு மழைக்கே வயல்காடாக மாறிய நகராட்சி சாலைகள்

உடுமலை, அக். 13- உடுமலை நகரில் தோண்டப் பட்ட பாதாள சாக்டை குழிகள் மூடப்படாமல் இருப்பதால் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடுமலை நகராட்சி நிர்வாகத் தின் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ரூ.39.46 கோடியும், சாலைகள் அமைக்க ரூ.17 கோடி யுமாக  மொத்தம் ரூ.56.5 கோடி ஒதுக்கப்பட்டது. இதன்படி நகர் முழுவதும் சுமார் 97 கிலோ மீட் டர் தொலைவிற்கு பாதாள சாக் கடை திட்ட வேலைகள் ஆரம் பிக்கப்பட்டது. இதனால் நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் குழிகள் தோண்டப்பட்டடு பல வருடங்கள் வேலைகள் நடை பெற்றது. இந்நிலையில், பாதாள சாக்க டைக்குத் தோண்டப்பட்ட குழி களால் பல உயிர் பலிகள் ஏற்பட் டன.  தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாத நிலை யில், கடந்த ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட் டிற்கு வந்தது. ஆனால் இத்திட் டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படு கிறது. அனைத்து சாலைகளிலும் குண்டும், குழியுமாக காணப்பட் டது. இதனால் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் எற்பட்டது. தற்போது உடுமலை நகர் முழு வதும் பெய்து வரும் மழையால் சாலைகளில் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் சாக்கடை அடைப்பு களை சரி செய்ய தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் இருப்பதால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே நக ராட்சி நிர்வாகம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நல னில் அக்கறை கொள்ளுமா!  (ந.நி)