tamilnadu

குறுகலான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

பொள்ளாச்சி, பிப். 19- பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் அருகே  குறுகலான சாலையால் வாகன  ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் மக்கள்தொகை நிறைந்த குடியிருப்பு கள் நிறைந்த இடத்தில் ஒன்றான வடுக பாளையம் வழியாக, பொள்ளாச்சியி லிருந்து கோவை நோக்கி ரயில்வே தண்ட வாளம் செல்கிறது. இந்த வழியாக பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவ ரத்து உள்ளது. தற்போது பாலக்காடு சாலை யில் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் கோவை சாலையிலிருந்து சிடிசி மேடு சாலை வழி யாக செல்கின்றன. இதனால், வடுகபாளை யம் ரயில்வே கேட் பகுதியில், கடந்த சில மாத மாக எப்போதும் இல்லாத அளவிற்கு அப்ப குதியில் வாகன போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது. ஆனால், இந்த ரயில்வே கேட் அருகே ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் சாலை குறுகலாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வரு கின்றனர். மேலும், வாகன நெரிசல் ஏற்படு வதால் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட் டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்திட வேண் டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.