tamilnadu

img

தாராபுரம் பகுதியில் சூறாவளி காற்று: மின்கம்பங்கள், தென்னை மரங்கள் முறிந்து சேதம்

தாராபுரம், மே 24 -தாராபுரம் பகுதியில் வீசிய சூறாவளி காற்றினால் 100க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.தாராபுரத்தில் வியாழனன்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் தூறல் மழை பெய்யத் துவங்கியது. இந்த சூறாவளிக் காற்றின் சீற்றம் அதிகரித்த நிலையில் அப்பகுதியில் நடப்பட்டிருந்த மின்கம்பங்கள் மற்றும் தென்னை மரங்கள் முறிந்துசரியத் துவங்கின. குறிப்பாக, ஊத்துப்பாளையம், கோவிந்தாபுரம், நாராணாபுரம், பொன்னாபுரம், வேலுர், சின்னப்புத்துர், அங்கிக்தொழுவு, பொட்டிக்காம்பாளைம், கரிகாளிபுதுர், தாசர்பட்டி பகுதிகளில் காற்றின் சீற்றத்திற்கு ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. இதில் கோவிந்தாபுரம்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.இதேபோல், 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததுடன்,தென்னை மரங்களில் இருந்து தேங்காய்கள் மற்றும் மட்டைகள் அனைத்தும் உதிர்ந்தன.மேலும், கால்நடைகளைக்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த தட்டுபோர்கள் மீதுவைக்கப்பட்டிருந்த ஸ்டீஸ் சீட்டுகள்காற்றில் பறந்தன. இதன் காரணமாக சேமித்து வைத்திருந்த தட்டுபோர்கள் விவசாய நிலங்களில் பரவலாக சிதறின. இந்நிலையில், சரிந்து விழுந்த மின் கம்பங்களை மீண்டும் நட்டு சீரமைக்கும் பணிகளில் மின்வாரியத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, விவசாய விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்றி மீண்டும் மின்கம்பங்களை நடும் பணியில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே காற்றின் சீற்றம் காரணமாக காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரம் இடையில் டவர் லைன்கள் சாய்ந்ததால் மின்சாரம் கொண்டு செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மின் விநியோகத்தை விரைந்து வழங்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திங்கட்கிழமை முதல் மின் விநியோகம் சீராகும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.அதேநேரம், பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு கணக்கீடுகள் மேற்கொண்டும், இயற்கை சீற்றத்தின் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு வருவாய் துறையினர், வேளாண்மை துறையினர் கணக்கீடுகள் செய்து தகுந்த நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.