tamilnadu

img

மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், ஆக. 27 – ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை மாற்றுத் திற னாளிகளுக்கான குறை தீர் கூட் டம் நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. செவ்வாயன்று காலை திருப் பூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாற்றுத் திற னாளிகள் சங்க மாவட்டச் செய லாளர் பி.ராஜேஷ், மாவட்டப் பொருளாளர் ஆர்.காளியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜார்ஜ் வர்க்கீஸ், செல்வக்குமார், சந்திரகலா, கோபால், பாண்டியன் உள்பட மாற்றுத் திறனாளிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி அதில் அரசு மருத்துவரை வரவழைத்து மாற்றுத் திறனாளி களுக்கு அடையாளச் சான்று, பேருந்து மற்றும் ரயில் பயண அட்டை உள்ளிட்டவை அங் கேயே வழங்க வேண்டும். மாற் றுத் திறனாளிகளுக்கு வட்டாட்சி யர் உதவித் தொகை வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் 4 மணி நேர வேலை, சட்டக்கூலி வழங்க வேண்டும், இலவச வீட்டுமனைப் பட்டா,  தொகுப்பு வீடுகள் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன. காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்த நிலையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலு வலர் சந்திரசேகர் சம்பவ இடத் துக்கு வந்து சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாதந்தோறும் மாற்றுத் திறனா ளிகளுக்கு குறை தீர் கூட்டம் நடத் தும் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதுடன், முதல் கூட் டத்தை செப்டம்பர் 3ஆம் தேதி நடத்துவதாகவும் தெரிவித்தார். அத்துடன் மாற்றுத் திறனாளிகளி டம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 175 மனுக்கள் பெறப் பட்டன.