tamilnadu

img

அவிநாசி அரசு மருத்துவமனையில் காணாமல் போன மூலிகைச்செடிகள்

அவிநாசி, நவ.10- அவிநாசி அரசு மருத்துவமனையில்  சித்த மருத்துவ பிரிவில் நடப்பட்டிருந்த  பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மூலிகைச் செடிகள் காணவில்லை. அவிநாசி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவத்திற்கு என தனி பிரிவு  செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு மூலி கைத் தோட்டமும் உள்ளது.  பயன்படுத்தும் மூலிகைக்காக அவிநாசி சிறு தொழில் பேட்டை சங்கம் சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மூலிகைச்செடிகள் வழங் கப்பட்டது. ஆனால் அவை நடவு செய்யப் பட்ட இடத்தில் தற்போது நான்கு செடி கள்  மட்டுமே காணப்படுகிறது. 10 ஆயி ரம் ரூபாய் மதிப்பிலான செடிகள் வழங் கப்பட்டுள்ளதாக தகவல் பலகை மட்டும் உள்ளது. மூலிகைச் செடி காணவில்லையா அல்லது விளம்பரத்திற்காக மட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா? என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.