tamilnadu

img

மேட்டுப்பாளையம் கோரச்சம்பவம்: நீதி கேட்டு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் - கைது

கோவை, டிச. 3- மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழக்க காரண மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி யும், உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கேட்டும் கோவையில் செவ்வா யன்று அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் திங்களன்று சுவர் இடிந்து விழுந்து 17 தலித் அருந்ததிய மக்கள்  பரிதபமாக உயிரிழந்தனர். இதற்கு காரண மான சக்கரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திங்களன்று போராட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது காவல்துறையினர் கொடூர தாக்குதல் நடத்தியதுடன், சிறையில் அடைத்துள்ளனர்.  இந்நிலையில் 17 அப்பாவி மக்கள் உயிரிழப்பிற்கு காரண மான சிவசுப்பிரமணியம் மீது வன் கொடுமை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தியும், நியாயம் கேட்டு போராடியவர்களை கைது செய் ததை கண்டித்தும்  செவ்வாயன்று கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட் டிணன் தலைமை வகித்தார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சுசி.கலையரசன்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொது செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, ஆதி தமிழர் கட்சி தலை வர் கு.ஜக்கையன், இந்திய மாண வர் சங்க மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா மற்றும்  மே 17 இயக்கம், திராவிட தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கும் மேற்பட்டோரை கைது செய் தனர்.