மே.பாளையம், மார்ச் 15- கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் வருகை குறைந்து மேட்டுப்பாளையம் காய்கறி சந்தையில் டன் கணக்கில் மலைக் காய்கறிகள் மற்றும் வாழைத்தார் கள் தேக்கமடைந்துள்ளதால் வியா பாரிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் விளை யும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டை கோஸ், நூல்கோல், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறி கள் அனைத்தும் மேட்டுப்பாளை யத்தில் இயங்கி வரும் காய்கறி மண்டிகளுக்கு டன் கணக்கில் லாரி கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு கூடும் மொத்த வியாபாரிகள் இக்காய்கறிகளை ஏலம் மூலம் விலை நிர்ணயித்து வாங்கி அவற்றை கொண்டு செல்வது வழக் கம். இந்நிலையில், தினசரி நீலகிரி மாவட்டத்திலிருந்து குறைந்தபட் சம் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் வரும் சுமார் 1,500 டன் காய் கறிகளில் எண்பது சதவிகிதம் வரை கேரளாவிற்கே கொண்டு செல் லப்படுகிறது. அதேபோல் மேட்டுப் பாளையம் பகுதியில் விளையும் வாழைத்தார்களில் தொண்ணூறு சதவிகிதம் வரை கேரள வியாபாரி களால் வாங்கப்படுகிறது. குறிப் பாக சிப்ஸ் உள்ளிட்ட தேவைக ளுக்கு நேந்திரன் வாழைகள் இங் குள்ள வாழை மண்டிகளில் இருந்து கேரளாவிற்கு செல்கின்றன. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதன் பீதி காரணமாக இந்த ஒட்டுமொத்த வர்த்தகமும் முடங்கி வருகிறது. கேரளாவில் மக்கள் அதிகளவில் கூடும் வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், கடைகள், உணவகங் கள் என பெரும்பாலும் மூடப்பட்டு வியாபாரம் மந்த நிலையில் இருப்பதாலும், கேரளாவிற்குள் நுழையும் அனைத்து பொருட்களும் கடும் சோதனைக்கு பின்பே அனு மதிக்கப்படுவதாலும் சிக்கல் ஏற் பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து வியாபாரிகள் தமிழகத்திற்கு வர தயக்கம் காட்டுகின்றனர். மலைக்காய்கறிகளை வாங்க வும் வாழைத்தார்களை கொள்முதல் செய்யவும் மேட்டுப்பாளையத்தில் குவியும் கேரள வியாபாரிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால், வழக்கமான வியாபா ரம் இல்லாமல் சந்தைகள் வெறிச் சோடி காணப்படுகிறது. இதனால் தினசரி ஆயிரம் டன் வரை காய்கறிகளும், ஐநூறு டன் வரை வாழைத்தார்களும் தேக்க மடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் வியாபாரிகள், இத னால் இவற்றின் விலையும் சரிந்து வருவதாக கூறுகின்றனர். நேந்தி ரன் வாழை கிலோ ரூபாய் 40 முதல் 50 ரூபாய் வரை விலைபோன நிலை யில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால ரூபாய் 15 முதல் 20 வரை மட்டுமே விலை போவதாகவும், அதே போல் நீல கிரி கேரட் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விலை போன நிலையில் தற்போது ரூ.25 முதல் 35 வரை மட் டுமே விலை கிடைப்பதாகவும் கூறு கின்றனர். ஒரு சில தினங்கள் கூட இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாத காய்கறி மற்றும் பழங்கள் தேங்கி வருவதால் கடும் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், இந்நிலை மேலும் தொடர்ந்தால் விவசாயிகள் வியாபாரிகள் என அனைத்து தரப் பினருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக் கின்றனர்.