tamilnadu

img

பழிவாங்கல் நடவடிக்கையை கைவிடக் கோரி அரசு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 11 – தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகளைப் பழிவாங்கும் அரசு நிர்வா கம் மற்றும் அதிகாரிகளின் போக்கைக் கண்டித்தும், பழிவாங்கல் நடவடிக்கை யைக் கைவிட வலியுறுத்தியும் திருப்பூரில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளியன்று மாலை நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில் போராட்டக் கோரிக்கைகளை விளக்கி, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன், மாநிலத் துணைத் தலைவர் எம்.சீனிவாசன் ஆகியோர் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக சங்க நிர்வாகிகள் சீனிவாசன், பாஸ்கரன், பாலசுப்பிரமணியன், ராமன் உள்ளிட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்தி கேயனைச் சந்தித்து பழிவாங்கல் நட வடிக்கையை அரசு கைவிட வலியுறுத்தும் மனுவை அளித்தனர். இந்த போராட்ட இயக்கத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் எஸ்.முருகதாஸ் நன்றி கூறி னார்.