நீலகிரி, அக்.15- கோத்தகிரி அருகே பல ஆண் டுகளாக குடியிருக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு, அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பெருந்திரள் முறை யீட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். நீலகிரி மாவட்டம், கோத்த கிரி தாலுகாவிற்கு உட்பட்ட வனக்கம்பை குறிஞ்சி நகர், குயின் சோலை கணபதி புரம், இடிக் கொரை ஆகிய பகுதிகளிலுள்ள புறம்போக்கு நிலங்களில் ஏராள மான பொதுமக்கள் வீடுகட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரு கின்றனர். இந்த குடியிருப்புக்கு வீட்டுவரியும் செலுத்தி வருகின்ற னர். மேலும், குடியிருப்பு சான்று, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவ ணங்களும் அரசால் வழங்கப்பட் டுள்ளது. ஆகவே, இப்பகுதியி லுள்ள குடியிருப்புக்கு பட்டா வழங்குமாறு குடியிருப்பு வாசிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து வலியு றுத்தி வந்தனர். இந்நிலையில், இக்குடியிருப்பு களுக்கு பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோத்தகிரி இடை கமிட்டி யின் சார்பில் செவ்வாயன்று கோத்தகிரி வட்டாட்சியர் அலுவ லகத்தில் மனு கொடுக்கும் பெருந்திரள் முறையீடு நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு கட்சியின் இடைக்கமிட்டி செயலா ளர் வி.மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் மனுகொடுக்க வந்தவர்களிடம் கோத்தகிரி வட் டாட்சியர் மோகனா பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இப்பேச்சுவார்த் தையின்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.பத்ரி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.மகேஷ் ஆகி யோர் உடனிருந்தனர். இதன்பின் துணை வட்டாட்சியர் தனலட்சுமி பொதுமக்கள் வழங்கிய மனுக் களை பெற்றுக்கொண்டார்.