tamilnadu

img

மாமேதை எங்கெல்ஸ் 200ஆவது ஆண்டு பிறந்தநாள்

எழுச்சிமிகு கொண்டாட்டம்

திருப்பூர், நவ. 28 – உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தை தோற்றுவித்த மூலவர்களில் ஒருவரான மாமேதை பிரடெரிக் எங்கெல்ஸின் 200  ஆவது ஆண்டு பிறந்த தின விழா எழுச்சியு டன் கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகமான தியாகி பழனிச்சாமி நிலையத்தின் முன் பாக வியாழக்கிழமை காலை மாமேதை பிரடெரிக் எங்கெல்ஸ் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், எங்கெல்ஸை நினைவு கூர்ந்து  உரை  நிகழ்த்தினார். அப்போது, மார்க்ஸின் உற்ற தோழரான பிரடெரிக் எங்கெல்ஸ், மார்க்ஸை சந்திப்பதற்கு முன்பாகவே, பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத் திரத்தை சுயமான முறையில் அறிந்தார். அவரது குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், டூரிங்கிற்கு மறுப்பு உள்ளிட்ட மூல நூல்கள் மார்க்சிய தத்துவத்தை தெளிவாக விளக்கக் கூடி யவை. அவற்றை அனைவரும் படிக்க வேண்டும் என்று கே.கனகராஜ் கூறி னார்.  இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட கட்சி அணியினர் பெருந்திரளானோர் பங்கேற்றனர். முடிவாக, பிரடெரிக் எங் கெல்ஸ் நாமம் வாழ்க என்ற முழக்கத்து டன் இந்த நிகழ்வு நிறைவு பெற்றது.

தருமபுரி

பிரடரிக் ஏங்கல்ஸ் பிறந்தநாளை   முன்னிட்டு தருமபுரி செங்கொடிபுரத்தில் அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிசுபா லன், எஸ்.கிரைஸாமேரி,சோ.அருச் சுணன், நல்லம்பள்ளி ஒன்றியச் செயலா ளர் கே.குப்புசாமி,மாவட்டகுழு உறுப்பி னர் கே.பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.