கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கோவை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த எம்.இளையபாரதி என்பவர் தங்க பதக்கம் வென்றார். மேலும், இதேபகுதியை சார்ந்த பி.பிரகாஷ் என்பவர் தில்லியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், சாதனை படைத்த இவ்வீரர்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கணேஷ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.புனிதா மற்றும் பழனிச்சாமி, முரளி ஆகிய நிர்வாகிகள் பாராட்டி கௌரவித்தனர்.