tamilnadu

img

கறுப்பு மேல் கொண்ட காதல்

ஆயிரம் இரவுகள் சேர்ந்தால் -என்

இருட்டும் இளம் பகல்

ஆயினும் உன் ஒரு சிரிப்பால் - என்

இருட்டும் ஒளிப்பகல் .

     நீ - கறுப்பு ராகம்!

     நீ - கனவின் தாகம் !

நெருப்பு கூட நீ தொட்டதுமே

கறுப்பாய் கனன்று எரியும்' - எழில் - விரியும்.

                         ( ஆயிரம்)

அமாவாசையை பிரம்மன் 

குழைத்துக் குழைத்து

அழகே உனக்கு படைத்தா 

னடியோ தேகம்?

அன்பே நான் தொட 

நான் தொடதேகம்

இசைக்கோ வைகளில்

எட்டாம்சுரமாய் ஆகும்.

    இரவு பலருக்கு பரிச்சயம்

    ஆனால் ஆனால்,

    எனக்கு நீ மட்டும் அதிசயம்!

(ஆயிரம்)

இருண்ட திராட்சைகள் 

பலப் பல உண்டு அன்பே

திரண்ட திராட்சையை

சேகரம் செய்தேன் முன்பே

உன் - உருண்டு திரண்ட விழிகளுள் 

இரண்டினைப் பதித்தேன்!.

நான் - மிரண்டு போனேன் நீகருங் காளி  

துதித்தேன்

   சிகப்புச் சிசுவை நீகொடு 

   எனினும்... எனினும்..

   உனக்குப் பிடித்த சிசுகொடு!

;