பொள்ளாச்சி, ஜூலை 11- பொள்ளாச்சி அருகே இன் டேன் காஸ் நிரப்பும் ஆலையில் லாரி ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள பெரியகளந்தை யில் இன்டேன் கேஸ் நிரப்பும் ஆலை உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் லாரிகளில் சிலிண்டர் ஏற்றி கொண்டு செல்ல 50 க்கும் மேற்பட்ட லாரி ஓட்டு நர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கிருந்து கோவை, திருப்பூர், மதுரை, உதகை, குன்னூர், பாலக் காடு, பழனி, தாராபுரம், காங்க யம், வெள்ளகோவில், பொள் ளாச்சி, உடுமலை வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரி மூலம் சிலிண்டர்கள் கொண்டு சென்று அங்குள்ள ஏஜன்சிகளுக்கு இறக்கி விட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கேஸ் நிரப்பும் ஆலையில் பணியாற்றும் பெண் அலுவலர் ஒருவர், அங்கு பணிபுரி யும் லாரி ஓட்டுநர் ஒருவரை ஒரு மையில் திட்டியதாகக் கூறப்படு கிறது. இதனையடுத்து சக லாரி ஓட்டுநர்கள் வியாழனன்று காலை 9 மணிமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த நெகமம் காவல் ஆய்வாளர் வெற்றிவேல் ராஜன் சம்மந்தப்பட்ட பெண் ஊழியர்மற்றும் ஓட்டுநர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மதியம் 3 மணிக்கு பின்னர் அனைத்து லாரி ஓட்டுநர்களும் தங்களது பணிக்கு சென்று லாரியை ஆலைக்குள் ஓட்டிசென்று கேஸ் சிலிண்டர்களை ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்ற னர். இந்த தீடீர் போராட்டத்தில் அப்பகுதியில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.