tamilnadu

img

காஷ்மீரை போல் அராஜகத்தை அரங்கேற்றும் காவல்துறை

திருப்பூர், ஆக. 25 – திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வாவிபாளையம் பகுதி யில் விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு காவல் துறையினர் அராஜகமாக அத்துமீறி நடந்து கொண்டதற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்தார். வாவிபாளையத்தில் ஞாயி றன்று நடைபெற்ற விவசாயிகள் கண்டனக் கூட்டத்தில் பி.ஆர்.நடராஜன் பேசுகையில்: காஷ் மீரில் என்ன நடந்து கொண்டி ருக்கிறது என்பதைப் பார்க்க அங்கே  போக வேண்டிய தில்லை. இங்கேயே அப்படித்தான் அரசு நிர்வாகம் நடந்து கொள்கி றது. அங்கு ராணுவத்தை வைத்தி ருக்கின்றனர். இங்கே காவல் துறையை வைத்து அராஜகத்தை அரங்கேற்றுகின்றனர். திருப்பூரில் ஏடிஎஸ்பியாக வருவோர் குறுக்கு வழியில் பதவி உயர்வு பெறுவதற்காக அராஜகமாக நடந்து கொள்வார் கள் போல! ஏற்கெனவே ஏடிஎஸ்பி பாண்டியராஜன் சாமளாபுரத்தில் ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார். அவருக்கு பதவி உயர்வு கொடுத்தனர். இப்போது குணசேகரன் அராஜகத்தை அரங்கேற்றி இருக்கிறார். பெண் காவலர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டதாக தெரி வித்தனர். பெண் காவலர்கள் வேண்டும் எனப் போராடியதே மக்கள்தான். அவர்களுக்கு வேலை கிடைக்க காரணமாக இருக்கும் மக்களிடமே மோசமாக நடந்து கொள்வதா? இந்தியாவில் முதல் முறையாக 2011இல் தேசிய நெடுஞ்சாலை 47ல் வாளையார் முதல் செங்கப் பள்ளி வரை எக்ஸ்பிரஸ் வே  அமைக்கப்பட்டது. இந்த பகுதி யில் சுங்கக் கட்டணம் மற்ற பகுதி களை விட அதிகம் வசூலிக்கப்ப டுகிறது. இதேபோல் தில்லி ஆக்ரா இடையே யமுனா எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்பட்டபோது கூர்கான் பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் காவல் துறை துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட னர். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பழைய சட்டத்தை மாற்றி புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியது. அதன்  அடிப்படையில்தான் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த சட்டப்படி விவசாயிகளின் நிலத்தின் மதிப்பைவிட மூன்று மடங்கு இழப்பீடு வழங்க வழி செய்யப்பட்டது. அதன் பிறகு சாலை அமைப்பதற்கு நிலம் எடுப்பதில் பிரச்சனை ஏற்படுவ தில்லை. ஆனால் உயர் மின்கோபுரம் அமைக்கும் பிரச்சனையில் ஏற் கெனவே அமைக்கப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாத வாடகை  தருவதுடன், புதிதாக மின்கோபு ரங்களை நிலத்தில் அமைக்காமல் புதைவழித் தடமாக கொண்டு செல்ல வேண்டும் என விவசாயி கள் கேட்கின்றனர்.  தில்லியில் இந்த விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசுவதற்கு நேரம் கேட்டால் அமைச்சர் நேர மில்லை என்கிறார். விவசாயிகள் இந்த விசயத்தில் உறுதியாக நிற்கின்றனர். நியாயமான கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும். தினமும் போராட்டம் என் றால் சலிப்பாக இருக்கிறது என சிலர் நினைக்கலாம். ஆனால் ஒரு போராட்டம் பல கல்வியைக் கற்றுக் கொடுக்கும். இதை மாநிலப் பிரச்சனையாக மாற்றி அரசின்  கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகள் ஓரணியில் உறுதியாக போராடி னால் நிச்சயம் முடிவு கிடைக் கும். விவசாயிகளின் போராட்டத் துக்கு எல்லாவித உதவிகளையும், ஆதரவையும் நாங்கள் கொடுப் போம். இவ்வாறு பி.ஆர்.நடரா ஜன் கூறினார்.