tamilnadu

img

தாராபுரத்தில் எல்ஐசி ஊழியர்கள் வெளிநடப்பு, வேலைநிறுத்தம்

தாராபுரம், பிப். 7- எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கப்படும் என பட் ஜெட்டில் அறிவிப்பினை எதிர்த்து  செவ்வாயன்று நாடு முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தில் தாராபுரம் எல்ஐசி ஊழியர்க ளும் ஈடுபட்டனர்.  மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்கப்படும் என அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்களும், முகவர்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காப்பீட்டு ஊழியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உடன டியாக ஒரு மணி நேர வேலை நிறுத்தத் திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த அறைகூவலை ஏற்று தமிழகத்தில் 100 விழுக்காடு வேலை நிறுத்தம் நடைபெற்றது.  இதன் ஒருபகுதியாக தாராபுரம் எல்ஐசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை வெளிநடப்பு செய்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், எல்ஐசி பங்குகளை தனியா ருக்கு விற்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் கூட் டமைப்பு நிர்வாகி மதிவாணன், எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்க நிர்வாகி மணவாளன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அளவில் 72 சதவிகித காப்பீடு வணி கத்தை செய்து வரும் எல்ஐசி நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் முடிவை கைவிடவேண்டும் என வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர்.