tamilnadu

img

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனின் வெற்றியை உறுதி செய்வோம்

சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனின் வெற்றியை உறுதி செய்வோம் என கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இவரின் வெற்றிக்கு களப்பணியாற்றும் வகையில் பல்வேறு இடங்களில் செயல்வீரர்கள் கூட்டம் வெகு உற்சாகத்தோடு நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதி யாக, கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் திங்களன்று கவுண்டம்பாளையம் கல்பனா திருமண மண்டபத்தில் நடை

பெற்றது. திமுகவின் மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் பையா கவுண்டர், அறிவரசு, மதியழகன், டி.பி.சுப்பிரமணியன், பெ.அர.கணேசமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் மகேஷ்குமார், கணபதி சிவக்குமார், பரமசிவம், மகேந்திரன், சின்ன ராமகிருஷ்ணன், துடியலூர் பாபு, கே.காமராஜ், எஸ்.பி.பச்சைமுத்து, ஆர்.வி.எஸ். நடராஜன், மதிமுக மாநகர் மாவட்டசெயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், முத்துசாமி, வெ.சு.சம்பத்,தியாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் சி.சிவசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் குழந்தைவேலு, ஸ்ரீபதி, கனகரத்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தம்பி வினோத், ராகவன், தமிழ்புலி

கள் சுரேஷ், கோவை வீரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, என்.பாலமூர்த்தி, வி.பெருமாள், ஆர்.கேசவமணி மற்றும் எம்எம்கே, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, திக,திவிக, தபெதிக, ஆதித்தமிழர் பேரவை மற்றும்விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றினர்.


எஸ்எஸ்.குளம் பகுதி செயல்வீரர்கள்

இதேபோல் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்எஸ்.குளம் பகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பாளையம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்

டத்திற்கு திமுக பகுதி கழக செயலாளர் பையாக்கவுண்டர் தலைமைவகித்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ், காங்கிரஸ் கட்சியின் நாகராஜ், மதிமுக விஷ்வராஜ், பாலகுருசாமி, வே.க.ராமசாமி, கொமதேக சுதாகர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சவுந்திரராஜ், மூர்த்தி, விஷ்வநாதன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்துவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆயிரத்திற்

கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


சூலூர் செயல் வீரர்கள் 

சூலூர் சட்டமன்றதிற்குட்பட்ட செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாயன்று சுல்தான் பேட்டையில் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் டில்லிபாபு, சூலூர் தாலுகா செயலாளர் ஆறு

முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுச்சாமி, திமுகமுன்னாள் அமைச்சர் பொங்களூர்ந.பழனிச்சாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சன்ராஜேந்திரன், சந்திரன், மகாலிங்கம், தென்றல் செல்வா, தளபதி முருகேசன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி.எம்சி.மனோகரன், சிவகுமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் குகன் மில் செந்தில், கந்தசாமி முத்துகிருஷ்ணன், செல்வராஜ், பாலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டங்களில் மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் தீவிரமாக களப்பணியாற்று

வோம் என சூளுரைக்கப்பட்டது. முடிவில் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஏற்புரையாற்றினார்.

;