தருமபுரி, ஆக.27- சென்னையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஆடிட்டர் குரு மூர்த்தி பெண்கள் குறித்து மிக மோசமாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டு மொத்த பெண் சமூகத் தையே இழிவாக பேசிய குருமூர்த்தியை கண்டித்து மாதர் சங்கத்தினர் பல் வேறு பகுதிகளில் போராட் டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன் ஒரு பகுதியாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ. ஜெயா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத்தலைவர் கே. பூபதி, பொருளாளர் பி.ராஜ மணி, நிர்வாகிகள் மீனாட்சி, கே.சுசிலா, ரங்க நாயகி, நிர்மலா ராணி, சுபா உள்ளிட்டோர் பேசினர்.
கோவை
இதேபோல் பெண் களை இழிவுபடுத்தி பேசிய குருமூர்த்தியை கண்டித்து மாதர் சங்கத்தின் சார்பில் கோவை சிங்காநல்லூர் நேதாஜிநகர் மற்றும் காரமடை ஆகிய பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.ராதிகா, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ராஜலெட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.