tamilnadu

img

கிருஷ்ண ஜெயந்தி வசூல்: பணம் கேட்டு கடைக்காரரை அடித்து கொலை மிரட்டல்

திருப்பூர், ஆக. 19 – கிருஷ்ண ஜெயந்தி கொண் டாடப் போவதாகக் கூறி கடைக் காரரிடம் பணம் கேட்டு கட்டா யப்படுத்தி, அடித்துக் கொலை மிரட்டல் விடுத்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் மீது காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்துள்ள னர். திருப்பூர் அருகே முதலிபாளை யம் ஊராட்சி சிட்கோ பகுதியில் கடை வைத்திருப்பவர் சிவானந் தம். இவரது  மனைவி அன்ன பூர்ணா. ஞாயிறன்று சிவானந்தம் வெளியே சென்றிருந்த நிலையில் கடையில் அன்னபூர்ணாவும், அவரது தம்பி சிவாவும் வியா பாரம்செய்து கொண்டிருந்தனர். அப்போது விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் அங்கு வந்து கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட வேண்டும் அதற்கு ரூ.1,000 பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு சிவா, ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இதே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட பணம் வாங்கிச் சென்றனர். இப்போது ஒரே அமைப்பினருக்கு மீண்டும் எப்படி பணம் தர முடியும் என்று கேட்டிருக்கிறார்.  ஆனால் அதைக் கேட்காமல் கட்டாயம் ரூ.1,000 தர வேண்டும் என அந்த கும்பல் வாக்குவா தம் செய்துள்ளது. வேறு வழியில் லாமல் ரூ.300 வேண்டுமானால் தருகிறோம் என சிவா கூறியி ருக்கிறார். இதை ஏற்காமல் மிரட்டல் விடுத்த விஸ்வ ஹிந்து பரிஷத் கும்பல் கடைக்குள் இருந்த சிவாவை தாக்கினர். அதைத் தடுக்க முயன்ற அன்ன பூர்ணாவையும் அவர்கள் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர்.

இந்த காட்சி அங்கிருந்த கண் காணிப்பு கேமிராவில் பதி வாகி இருந்தது. இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, தாக்குத லுக்கு உள்ளான சிவா ஊத்துக்குளி காவல் நிலையத்தில் தன்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத் தவர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் மீது காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்தனர். தாக்குதல் நடத்திய விஸ்வ ஹிந்து பரிஷத் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் வசந்த், அந்த அமைப்பைச் சேர்ந்த விக் னேஷ், நிசார் அலி, ரஞ்சித் மற்றும் அய்யாசாமி ஆகிய ஐவர் மீதும் வழக்குப்  பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஏற்கெனவே இந்த கும்பல் பல குற்ற வழக்குகளில் தொடர் புடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு முன்னதாக வேறொரு மளிகைக்  கடைக்காரரிடம் சென்று அவர் களாகவே ரூ.10 ஆயிரம் என ரசீது எழுதி பணம்கொடுக்க வேண்டும் என்றும் அவரை மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். மளிகைக்  கடையையே விற்றால்தான் அந்த பணமே தேறும் என மேற்படி கடைக்காரர் வேதனையுடன் புலம்பியிருக்கிறார். இது போல் இந்த பகுதியில் மேற்படி சமூக விரோத கும்பல் தொடர்ந்து பொது மக்களுக்கும், வர்த்தகர்கள், வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினருக்கும் அச்சுறுத்தலாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இவர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின் றனர்.