கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளையும் இன்று மாலை முதல் மூட கோவை மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் 206 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அண்டை மாநிலமான கேரளாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கேரள மாநில எல்லையோரத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து சோதனைச் சாவடிகளையும் இன்று மாலை முதல் மூட கோவை மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கும், கேரள மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் அனைத்து வாகனம் தொடர்பு நிறுத்தி வைக்கப்படுகிறது.