பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய பார் நாகராஜ் மற்றொரு வழக்கில் கைது
பொள்ளாச்சி, ஜூன் 8- பொள்ளாச்சி பாலியல்வழக்கில் தொடர்புடைய அதி முக பிரமுகர் பார் நாகராஜ் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த விநாய கர் காலனியில் வசிக்கின்ற சிபின் என்பவருக்கும், அதே பகுதியைச்சேர்ந்த சபரீஸ்வரன் என்ற இளைஞருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழனன்று இரவு சிபின் வீட்டிற்குத் தனது கல்லூரி நண்பர்களுடன் சென்ற சபரீஸ்வரன், அவர் வளர்த்துக் கொண்டு இருந்த விலை உயர்ந்த நாய்க்குட்டி (ஹக்) யினை தூக்கி வந்துள்ளார். அதே சமயத்தில் அப்பகுதியிலுள்ள அனுப் என்ற தனது நண்பனின் இல்லத்திற்கு சிபின் ரம்ஜான் விருந்திற்காகச் சென்றுள்ளார். அப்போது தனது நாய்க்குட்டியினை பார்த்து, அன்று இரவு 11 மணி அளவில் மதுபோதையில் தனது கல்லூரி நண்பர்கள் 8 பேருடன் சென்று அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். சபரீஸ்வரன் தரப்பில் பாலியல் வழக்கில் தொடர்புடைய பார் நாகாரஜன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் அடிதடி தகராறில் ஈடுபட்டுள்ளனர் . இதனையடுத்து அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அடிதடி மற்றும் அப்பகுதியில் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் வாகனங்களுக்கு சேதம் விளைவித்த தாகவும், இருதரப்பினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோட்டில் 5,141 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர்
ஈரோடு, ஜூன் 8- ஈரோடு மாவட்டத்தில் சனியன்று நடைபெற்ற ஆசிரி யர் தகுதி தேர்வில் 5141 பேர் தேர்வெழுதினர். ஈரோடு மாவட்டத்தில் முதல் தாள் தேர்வு 14 மையங் களில் நடைபெற்றது. 5,758 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதில் 5,141 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 617 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஞாயிறன்று நடைபெற உள்ள 2ஆம் தாள் தேர்வு 29 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 11 ஆயிரத்து 585 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.