அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்பு
கோபி, செப்.27- கோபிசெட்டிபாளையம் நக ராட்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் நகராட்சி சார்பில் நகராட்சி வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சி தேர்தல் மற் றும் வாக்காளர் பட்டியல் திருத் தம் தொடர்பான ஆய்வுக் கூட் டம் கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, வாக்காளர் பட்டி யலில் பெயர் சேர்தல், திருத்தம் செய்வது குறித்த சுலபமான வழிமுறைகள் தொடர்பாக கோட்டாட்சியர் விளக்கமளித் தனர். இதைத்தொடர்ந்து, இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நக ராட்சியின் வளர்ச்சிப்பணிகாக தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் குறித்தும் செயல்படுத் தப்பட உள்ள திட்டங்கள் குறித் தும் பேசினார். மேலும், கீரிப் பள்ளம் ஓடை தூர்வாருதல், 24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் திட்டம், குழந்தைக ளுக்கென தனி சிறுவர் நூலகம், புறவழிச் சாலை திட்டம் உள் ளிட்ட திட்டங்கள் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகளையும் அதி காரிகளுக்கு வழங்கினார்.