நாமக்கல், செப்.25- நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கா.மெக ராஜ் புதனன்று பொறுப் பேற்றுக் கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த மு.ஆசியா மரியம் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஆட்சி யராக கா.மெகராஜ் அறி விக்கப்பட்டார். இந் நிலையில் புதனன்று புதிய ஆட்சியராக கா. மெகராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நாமக்கல் மாவட்ட மக்கள் உழைப்பாளிகள். அவர்கள் செயலே அரசு அலுவலர்களை ஊக்கப் படுத்தி பணிகளை சிறப்பாக செயல்படுத்த உதவும் என்றார். மேலும், 2004ஆம் ஆண்டு நாமக்கல்லில் திட்ட அலுவலராக பணியாற்றியதை நினைவு கூர்ந்த துடன், பிற மாவட்டங்களில் உள்ள ஊராட்சி திட்ட இயக்குநராக 10 ஆண்டுகளும், ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குநராக 8 ஆண்டுகள் பணியாற்றி உள்ள தாகவும் தெரிவித்தார். இதன்பின், திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பயிற்சி பெற்று, வேலூர் மாவட்டத்தில் சார்- ஆட்சியராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து புதனன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்புப்பேற்றுக் கொண்டதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் தங்களது குறைகளை ஆட்சி யரிடம், மாவட்ட நிர்வாகத்திடமும் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் எனவும் கா.மெகராஜ் கூறினார்.