tamilnadu

கௌசிகா நதி ஆக்கிரமிப்பு - பொதுமக்கள் எதிர்ப்பு

அன்னூர், ஜூன் 28- கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்திற் குட்பட்ட பச்சாபாளையத் தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் அங்கு செயல்பட்டு வரும் தனியார் வயரிங் உற்பத்தி ஆலையானது, அருகி லுள்ள கௌசிகா நதியை யொட்டி கட்டிடம் கட்டும் பணியினை நடத்தி வருகி றது. இதற்காக கௌசிகா நதி பள்ளத்திற்குள் கற்க ளைக் கொட்டி குழிகளையும் தோண்டியுள்ளனர். இதற்கு அப்பகுதிப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு வாய்த்துறை அதிகாரிக ளுக்கு புகார் அளித்த நிலை யில், அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்ற னர்.

;