tamilnadu

img

சுகாதார நிலைய வாயிலுக்கு முன்பாகவே குப்பை

உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தள் பேபிஹால் பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலைய வாயிலுக்கு முன்பாகவே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த நேரமும் கழிவு நீர் வழிந்தோடுவதால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. ஆகவே, சுகாதார சீர்கேட்டு மையமாக மாறியுள்ள இப்பகுதியை சுகாதார மையமாக மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.