tamilnadu

கோவில் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

ஈரோடு, நவ.20- சத்தியமங்கலம் அருகே கோவில் கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகி றார்கள். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், துண்டன் சாலை பகுதியில் குற்றாலத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் செவ்வாயன்று இரவு மர்ம  நபர்கள் புகுந்து பூட்டை உடைத்து சிலை யின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகை மற்றும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென் றுள்ளனர். இந்நிலையில் புதனன்று காலை கோவில் பூசாரி வந்துள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக் கப்பட்டு பணம் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து பவானிசாகர் காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை யினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் கைரேகை நிபுணர்க ளும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை நடந்த கோவில் அருகே வீடு வணிக நிறு வனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறை யினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.