tamilnadu

போலீஸ்காரரின் தாயாரிடம் நகை பறிப்பு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

கோவை, நவ.4- கோவையில் ஆயுதப்படை காவலரின் தாயாரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட குற்ற வாளிகளை பிடிக்க தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளா கத்திலுள்ள ஆயுதப்படை காவலர் குடி யிருப்பில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் மாநகர ஆயுதப்படை காவலராக பணி யாற்றி வருகிறார். இந்நிலையில், ராஜேந்தி ரனின் தாயார் கனகம் (70) குடியிருப்பு பகுதி யில்  நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள் ளார். இதுகுறித்து பந்தய சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரும் நிலையில்,  நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் குற்ற வாளிகளை பிடிக்க காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.