tamilnadu

img

ஜன.8. வேலைநிறுத்தம்: சிஐடியு தெருமுனைக் கூட்டம்

கரூர்: கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மலைவீதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்த விளக்க கூட்டம் தொமுச மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், தொமுச மாவட்ட நிர்வாகி அப்பாசாமி, ஹச்எம்எஸ் சங்க தலைவர் ஆனந்தராஜ், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகி ராஜசேகர், ஏஐயுடியுசி சங்க நிர்வாகி மோகன், விடுதலை முன்ணி நிர்வாகி கதிரவன், எம்எல்எப் சங்க நிர்வாகி குணாளன், ஏஐசிசிடியு சங்க மாவட்ட செயலாளர் பால்ராஜ், ஏஐடியுசி சங்க மாவட்ட செயலாளர் ஜி.பி.எஸ் வடிவேலன், வேலாயுதம்பாளையம் நகர திமுக செயலாளர் சாமிநாதன், கரூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.