tamilnadu

img

பாதாள சாக்கடை திட்டத்தில் முறைகேடு: மார்க்சிஸ்ட் கட்சி புகார்

ஈரோடு, ஜூலை 25- ஈரோடு மாநகரில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின் றன. இதில் பாதாள சாக்கடை பணியும் அடங்கும். இதுதொடர் பாக வெளிப்படையான அணுகு முறையினை மாநகராட்சி நிர்வா கம் கடை பிடிக்கவில்லை என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு நகர செயலாளர் பி.சுந் தரராஜன் மற்றும் தாலுகா செய லாளர் எம்.நாச்சிமுத்து ஆகி யோர் மாவட் ஆட்சியரிடம் கொடுத்துள்ள புகார் மனு வில் கூறியிருப்பதாவது, பாதாள சாக்கடையுடன் வீடுகளை இணைக்கும் பணிக்கு வீட் டின் பணி குறித்து திட்ட மதிப்பீடு மேற்கொண்டு வரையறுக்க வேண்டும் என்பது விதியாகும்.  ஆனால் இந்த விதிகள் பின்பற்றப் படவில்லை. மாறாக ஒப்பந்ததாரர் கள் தங்கள் விருப்பம் போல் திட்ட மதிப்பீட்டை மேற்கொள் ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குளியலறை மற்றும் சமையலறை களிலிருந்து வரும் நீரை சேம்பர் அமைக்காமல், நேரடியாக கழி வறை நீருடன் இணைப்பது மற்றும் குழாய்களின் அளவும், தரமும் புறக்கணிக்கப்பட்டுள் ளன.  மேலும், மாநகராட்சி நிர்வா கம் வெளியிட்டுள்ள துண்டு பிர சுரத்தில் குறிப்பிட்ட தொகைக்கு மாறாக ஒப்பந்ததாரர்கள் அதிக மாக வசூலிக்கின்றனர். வசூலிக் கும் தொகைக்கான ரசீதும் தரு வதில்லை. இதுதொடர்பாக ஏற் கனவே புகார் செய்தநிலையில், வீட்டு உரிமையாளர்கள் 6தவ ணைகளில் வைப்புத் தொகை செலுத்தலாம் எனவும், ஒப்பந்ததா ரர்கள் பணம் வசூலிக்கக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் கூறி னார்.  இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தேர்ந்தெ டுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால்,ஆளுங்கட்சி பிரமு கர்களின் தலையீடும் உள்ளது. இந்நிலையில் கேட்கும் பணத்தை கொடுக்க மறுக்கிறார்கள் என சில வீடுகளுக்கு இணைப்பு கொடுக் காமல் பணியை பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.  எனவே இணைப்புகள் மேற் கொள்ளப்பட்டுள்ள வீட்டு உரி மையாளர்களிடம் விரிவான விசா ரணை நடத்தி ஒப்பந்ததாரர்கள் பெற்றுள்ள கூடுதல் தெகையை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக தொகை வசூலித்த ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். வெளிப்படையாக நிபந்தனைகளையும், கட்டணங் களையும் வெளியிட்டு புதிய ஒப்பந் ததாரர்களைக் கொண்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.மக்களின் ஒத்துழைப்போடு இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என அம்மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.